Sun. May 19th, 2024

மயிலாடுதுறை மாவட்டட் சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள நிகழ்வு, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..

சீர்காழி ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் தங்க நகை வியாபாரி தன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த விட்டில் புகுந்த கொள்ளையர்கள் தங்கராஜ் உள்ளிட்ட அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா( 45), மகன் அகில் (28) நிகழ்விடத்திலேயே இடத்திலேயே உயிரிழந்தனர்.

தன்ராஜ் மற்றும் மருமகள் நிகில் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்தினர். இதில், சிசிடிவியின் ஹார்டுடிஸ்க் மற்றும் கார் உள்ளிட்டவற்றையும் கொலையாளிகள் ஐந்து பேர் எடுத்துச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீர்காழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.